Tourist Places Around the World.

Breaking

Tuesday 25 August 2020

விலைமதிப்பே இல்லை - ஆன்மீக கதைகள் (496)

 

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


ஆஞ்சநேயர் உச்சரித்த ராமநாமத்திற்கு விலை மதிப்பே கிடையாது. கபீர்தாசரின் மகன் கமலதாஸ் ஒரு பஜனைக்குச் சென்றார். அவர் ஸ்ரீராமனைப் புகழும் ஏராளமான பஜனைப் பாடல்களைப் பாடினார். இதைக் கேட்ட வணிகர் ஒருவர், மகிழ்ச்சிப் பெருக்கில் அவருக்கு பரிசளிக்க நினைத்தார். கமலதாசிடம் கொடுத்தால் வாங்கமாட்டார் என்பதால், அவருக்கே தெரியாமல், அவரது மேல்துண்டில், தான் அணிந்திருந்த மோதிரத்தை கட்டி விட்டார். வீட்டுக்கு வந்த மகனைக் கபீர்தாசர் கடிந்து கொண்டார். 


அப்பா! நான் அப்படிப்பட்டவனா? இது எப்படி வந்தது என்றே எனக்கு தெரியாது. ஆனாலும், யாரோ ஒருவர் அன்பளிப்பு அளிக்கும் அளவுக்கு என் பஜனை இருந்துள்ளது என்பதற்காக நீங்கள் பெருமைப்படலாம் அல்லவா! என்றார் கமலதாஸ். மகனே! அதற்காக இல்லை! கேவலம்... ஒரு மோதிரத்துக்காக விலை மதிப்பற்ற ராமநாமத்தை விற்றுவிட்டாயோ என்று தவறாக நினைத்து விட்டேன், என்றாராம் கபீர்தாசர். எல்லையில்லா மகிமையுள்ள ராமநாமமே, ஆஞ்சநேயருக்கு அனைவர் மனதிலும் நீங்கா இடத்தைத் தந்துள்ளது.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் ,  ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,          

No comments:

Post a Comment