Tourist Places Around the World.

Breaking

Monday 10 June 2019

ஸ்ரீ அடிமுடி சித்தர் / Sri Adimudi Siddhar

ஸ்ரீ அடிமுடி சித்தர்.

Sri Adimudi Siddhar

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மகான் ஒருவர் குடில் அமைத்து தமதுசீடர்களுடன் தவம் செய்துவந்தார்இவரின் சீடர்களில் அடிமுடி சித்தரும் 
ஒருவர்இவர் எளிமையான தோற்றம் கொண்டவர்சிவனடியார்களுக்கு 
உதவுவதையே பணியாக கொண்டவர்.

பக்தர்களின் வசதிக்காக அடிமுடி சித்தர் தனது குருவிற்கு பணிவிடை 
செய்த காலம் தவிர மற்றநேரங்களில் பக்தர்களுக்காக கிரிவலப்பாதையை துப்புரவு செய்து வந்தார்இதனை கண்ட அருகில் உள்ளகுடில்களில் இருந்த 
சிவனடியார்களும்சில தொழிலாளர்களும் தாமாக முன்வந்து இந்த ஆன்மீகபணியை செய்துவந்தனர்

ஆனால்தன்னுடன் இணைந்து பணியாற்றும் தொழிலளர்களுக்கு துப்புரவு பணிசெய்தஇடங்களில் இருந்து குப்பையை தன கரங்களில் எடுத்து
அளிப்பார்கைவிரித்து அவர்கள் பார்க்கும் பொழுது பணமாக இருக்கும்
இவ்வாறாக சித்தர் பெருமானின் அற்புதங்கள் ஏராளம்.

திருவண்ணாமலையில் உள்ள அரியவகை மூலிகைகளை கொண்டு 
தன்னை நாடி வரும் அன்பர்களின்நோய்களை குணமாக்கினார்தான் 
ஜீவசமாதி அடையும் காலம் வந்துவிட்டதை உணர்ந்த அவர் தனசீடர்களை அழைத்து "நான் தவத்தில் ஆழ்ந்தவுடன் என் உடலை தொடாமல் கால் 
பெருவிரல் இரண்டிலும் வைக்கோல் கயிற்றால் கட்டி இழுத்து செல்லுங்கள் 
எவ்விடத்தில் இக்கயிறு அறுந்துவிடுகிறதோ அங்கேஎன்னை அடக்கம் 
செய்யுங்கள்என்று கூறி ஜீவசமாதி அடைந்தார்.

பின்பு அவர் கூறியவாறு , வைக்கோல் கயிற்றால் கட்டி கிரிவலப்பாதையில் அவர் உடலை இழுத்துசெல்லும்போது அடிஅண்ணாமலை கவுதம 
மகரிஷியின் ஆசிரமத்திற்கு எதிரில் கயிறு அறுந்ததால் சித்தரை 
அவ்விடத்திலேயே அடக்கம் செய்தனர்சிலநாட்களுக்கு பின்பு சித்தரின் 
ஜீவசமாதி உரிய பராமரிப்பு இல்லாமல் பாம்பு புற்றாக மாறியது.

இந்நிலையில் கிரிவலம் வந்த சிவனடியார் ஒருவருக்கு சற்று தூரத்தில்
ஜோதி வடிவில் ஓர் ஒளிப்பிழம்பு தென்ப்பட்டதுஅவ்விடத்தை நோக்கி 
சென்றபோது அங்கே மிகப்பெரிய பாம்பு புற்று ஒன்றுஇருந்ததை கண்டு 
ஆச்சரியம் அடைந்தார்மேலும் அடிமுடி சித்தரின் மகிமைகளை அறிந்துகொண்ட அவர்அங்கேயே தனது இறைபணியை மேற்கொண்டார்சில 
நாட்களுக்கு பிறகு இடியுடன் கூடிய பலத்த மழைபெய்தது.

துநாள் வரை இதுபோன்ற மழையில் கரையாத புற்று அன்று சிறிது 
சிறிதாக கரைந்துகொண்டிருக்கும்போது அப்புற்றில் இருந்து சுயம்பு லிங்கம்ஒன்று தோன்றியதுஅச்சிவலிங்கத்தினை மூலவராக கொண்டு அங்கு சிறியகோவில் ஒன்று நிர்மாணிக்கப்பட்டதுஅன்றிலிருந்து கிரிவலப்பாதை அடி அண்ணாமலையில் கவுதம மகரிஷியின் ஆசிரமத்திற்கு எதிரில் உள்ள 
இக்கோவிலுக்கு வந்து அன்பின் உருவான அடிமுடி சித்தரின் அருள் பெற்று 
தங்களின் கர்மவினைப் பயனைபோக்கி நல்வாழ்வு பெற்றவர்கள் எண்ணி
லடங்காதுஇன்னும் இங்கு வரும் பக்தர்கள் அடிமுடி சித்தரை நினைத்து 
தியானம் செய்வதால் மன அமைதியும் நிம்மதியும் பெறுகின்றனர்.

ஜீவ சமாதி உள்ள இடம் ஆற்றல் நிரம்பிய இடமாகும்.அவர்களை பூரணமாய் வணங்கி  பழங்கள்அச்சுவெல்லம்அவல்தாம்பூலம்வாசனை உடைய 
மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு வழிபடுவது சிறப்புபொதுவாக குருவை தேடுபவர்கள் மகான்கள் மற்றும் சித்தர்களின் ஜீவ சமாதியில் வழிபாடு 
செய்தால் குருவருள் கிட்டும்அவர்களே வழி காட்டுவர்.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


mahans in thiruvannamalai , thiruvannamalai siddhargal , jeeva samadhi in thiruvannamalai , thiruvannamalai siddhar , siddhar temple in thiruvannamalai , thiruvannamalai siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in thiruvannamalai , siddhar temples in thiruvannamalai , thiruvannamalai sitthargal , siddhars in thiruvannamalai , 

No comments:

Post a Comment