Tourist Places Around the World.

Breaking

Friday 28 June 2019

பறக்கும் பெண் சித்தர் - பறவை சித்தர் / Sri Sakkarai Amma

பறக்கும் பெண் சித்தர் - பறவை சித்தர்

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


தமிழ்த்தென்றல் திருவிகாவே நேரில் பார்த்திருக்கிறார்..!!  சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் ஒரு மாது இருந்தார்கள். அவர் காலம் சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும்.  பறவை நாயகியர் நிலை மனோதத்துவத்திற்கு எட்டுவதா? எண்ணிப்பாருங்கள்…" (-இது 'உள்ளொளி' நூலில் தமிழ்த்தென்றல் திரு.வி.க அவர்கள் பறவை_சித்தர் பற்றி எழுதிய குறிப்பு.)  இப்படிக் குறிப்பிடப்படும் அந்த பறவை சித்தரின் பெயர் ஸ்ரீசக்கரை அம்மா..,  ஸ்ரீ_சக்ர_அம்மா:(ஸ்ரீ சக்கரை அம்மா)  சிவனையும், ஸ்ரீசக்ரத்தையும் வழிபட்டு வந்ததால், இவருக்கு ஸ்ரீசக்ர அம்மா என்றிருந்த பெயர் மருவி, காலப்போக்கில் ஸ்ரீ சக்கரை அம்மாவாக மாறிப்போனது.., அட்டமா சித்திகளில் ஒன்றான, லஹிமா எனும் காற்றில் பறக்கும் சித்து கைவரப் பெற்ற மகாயோகி இவர்.  

அப்படி இவர் பறந்ததால் அப்போது சென்னையில் ஏற்பட்ட பரபரப்பைத்தான் திரு வி.கவே தனது நேரடி சாட்சியமாக பதிவு செய்து வைத்திருக்கிறார்.  இங்கு உண்டியல் கிடையாது...எப்போதும் தன் இடையில் நாக பாம்பை சுற்றி கட்டி இருப்பார் இந்த பெண் சித்தர் (சக்கரை அம்மா) ..பறக்கும் சக்தி உடைய இவர் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பறந்தே செல்லும் சக்திபடைத்தவர்.இதனால் இவரை ‘பறவை_சித்தர் என்றும் கூறுவர்.  இவரது உபாசனை தெய்வம்சிவபெருமானே “காஞ்சி மகா பெரியவர் 1948, ஜனவரி மாதத்தில் 5 நாட்கள் சக்கரை அம்மா சன்னிதியில் உட்கார்ந்து தியானம் செய்தாராம். இவரது குரு சிவபெருமானே. சிவனையும் ஸ்ரீசக்கரத்தையும் மட்டுமே வழிபட்டு வந்ததால், ஸ்ரீசக்கர அம்மா என்றாகி சக்கரை அம்மாவாக மருவிவிட்டது.  இவர் ஒருமுறை தன் பக்தர்களை எல்லாம்"சென்னை திருவான்மியூர் திரிபுரசுந்தரி உடனுறை மருந்தீஸ்வரர் ஆலயத்துக்கு அழைத்துப் போய் ஈசனிடம், “என்னோட இந்த குழந்தைகளுக்கு ஒரு குறையும் வராமல் பார்த்துக்க. உன்னிடம் ஒப்படைக்கிறேன். நீதான் முக்தி கொடுக்கணும் சரியா?” என்று உரக்கச் சொன்னாராம். 

அப்படி சொன்ன பத்தாவது நாளில் 28-2-1901 பிற்பகல் 3.30 மணிக்கு சக்கரை அம்மா ஈசனுடன் கலந்தார்..  சமாதி ஆவதற்கு முன் தன் முதன்மை சிஷ்யன் மகாகவி பாரதியாரின் நண்பர் டாக்டர் நஞ்சுண்ட ராவ் என்பவரை அழைத்து தான் சமாதி ஆகி சரியாக 100 வருடங்கள் ஆனதும் என் சமாதி துலங்கும் என்றாராம்.  அதன்படியே தற்போது மிகுந்த அதிர்வுகளுடன்,வேண்டியதை கொடுக்கும் திருத்தலமாக சக்கரை அம்மாவின் சமாதி திருக்கோயில் திகழ்கிறது.இன்றும் இந்த ஜீவ சமாதியில் இங்கு மங்கும் சக்கரை அம்மா நடந்தபடி இருக்கும் காலடி ஓசையை கேட்க முடியும் என்கிறார்கள் அடியவர்கள்..  இங்கு மாதாந்திர திருவாதிரை,பௌர்ணமி நாட்கள் சிறப்பு...இதன் அருகிலேயே முருக அடியவர் மகான்_பாம்பன்_சுவாமிகள் சமாதி திருக்கோயிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.  தமிழறிஞரும் தேசபக்தருமான தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார் 'உள்ளொளி' என்ற தலைப்பில் தமது நூல் ஒன்றில் சென்னை கோமளீச்சுவரன் பேட்டையில்(தற்போது புதுபேட்டை) ஒரு மாது இருந்தார்கள். 

அவர் காலம் சென்ற மருத்துவர் நஞ்சுண்டராவின் குருவான சக்கரை அம்மா. அவ்வம்மையார் பறவையைப் போல் வானத்தில் பறப்பார். ஒருமுறை நான் வசித்த கல்லூரியின் (இராயப்பேட்டைவெஸ்லி கல்லூரி)மாடியில் பறந்து வந்து நின்றார்.  மானுடம் (மனிதன்) பறக்கின்றது என்றால் விந்தையல்லவா? நான் தேசபக்தன் ஆசிரியராக இருந்தபோது நஞ்சுண்டராவ் வுடன் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. நஞ்சுண்ட ராவ் அவர்கள், அம்மா சித்தர் இனத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னார்" என்று கூறியுள்ளார்.  ''சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே"...  சக்கரை அம்மாவை மனதில் கொண்டு வாருங்கள்...உங்கள் வாழ்வில் நிம்மதி தேடி ஓடி வரும் ஆம்! மன நிம்மதி வேண்டு பவர்கள், மனகுழப்பம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் உடனேசரியாகும். அதுமட்டுமல்ல சக்கரை அம்மா சன்னதி வந்து தொடர்ந்து 11 திருவாதிரை நாட்கள் வழிபட உங்கள் எண்ணம்கள் யாவும் ஈடேறும்.  

இங்கே சென்றவர்களின் மன உளைச்சல், தீராத வியாதி, குடும்பத்தில் மன வருத்தங்கள் ஆகியனவற்றுக்குத் தீர்வு கிடைப்பதாகவும் கூறுகின்றனர்.  ஆலயத்தின் பின்னால் இருக்கும் கூடத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு நீதிக்கதைகள், ஆன்மீக சிந்தனைகள், போதிக்கப் படுகின்றன. தியானம் செய்ய தியான மடமும் உள்ளது. கோயிலை நிர்வகிப்பது சுமனா சுரேஷ் என்பவர்.  சென்னை திருவான்மியூரில் கலாக்ஷேத்ரா ரோட்டில்,பாம்பன் சுவாமி திருக்கோயில் அருகில் சக்கரை அம்மா திருக்கோயில் உள்ளது.  நேற்றைய வாழ்வு அலங்கோலம்,அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்,வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்,அருள் கந்தன் தருவான் எதிர்காலம்,எனக்கும் இடம் உண்டு, அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்".  

Sri Sakkarai Amma Temple Late Dr. MCN Pvt Religious Trust # 75 Kalkshetra Road Thiruvanmiyur Chennai 600 041 India Tel: +91-44-2452 1236  சுவாமி விவேகானந்தர், ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், அடிமுடிப்பரதேசி, போளூர் விட்டோபா சுவாமிகள், ஸ்ரீ ரமண மகரிஷி போன்றோருடன் ஸ்ரீ சக்ர அம்மாவிற்கு சந்திப்பு நிகழ்ந்தவைகளுக்கான ஆதாரங்கள் உள்ளன..,  அம்மா மஹாசமாதி அடைந்த பிறகு, இவரது சமாதிக்கு வந்த மஹாபெரியவா இங்கு ஐந்து நாட்கள் தங்கி இருந்து தவம் செய்திருக்கிறார்..,  'மஹாபெரியவா'  எத்தனை பெரிய சக்திமையமாக அம்மாவின் மஹாசமாதி இருக்கும் என்பதை மஹாபெரியவா இந்த இடத்தை தேர்வு செய்ததிலிருந்தே நாம் புரிந்துகொள்ளலாம்..,  இத்தனை மகத்துவம் வாய்ந்த ஸ்ரீசக்ர அம்மாவின் மஹாசமாதி சென்னை திருவான்மியூரில் கலாஷேத்திரா ரோடில் அமைந்துள்ளது. சென்னை வாசிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்தான்.  

ஸ்ரீசக்கரத்தின் சக்தி பிரவாகமாக, திகழும் இந்த மஹாசமாதியில் அம்மாவின் சிலையுடன் ஒரு கோயில் அமைந்துள்ளது.  நேரில் தரிசிக்க வாய்ப்பு இருப்பவர்கள் சென்று, ஸ்ரீ சக்ர அம்மாவின் பரிபூரண அருள்பெறுக.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


mahans in chennai chennai siddhargal , jeeva samadhi in chennai chennai siddhar , siddhar temple in chennai chennai siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in chennai , siddhar temples in chennai chennai sitthargal , siddhars in chennai , lady siddhar , 


No comments:

Post a Comment