Tourist Places Around the World.

Breaking

Thursday 27 June 2019

அருள்வெளி சித்தர் என்ற மண்ணடி பாபா / Sri Arulveli Siddhar

அருள்வெளி சித்தர் என்ற மண்ணடி பாபா

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


அருள் வழங்கும் அருள்வெளி சித்தர் என்ற மண்ணடி_பாபா  சென்னையே ஒரு சித்தர் பூமி தான் இதயங்கள் இளைப்பாற எந்த வேளையிலும் புதுப்பொலிவோடு ஆன்மீகத்தை புரிய வைக்கும் ஞானிகளின் பாதம் தொட்டு வணங்கி பாவம் போக்கும் புண்ணிய பூமி சென்னை அதிலும் பாரிமுனை  சென்னை பூமி பல சித்தர்கள் பல ரூபங்களில் வந்து போகும் இடம் மிகப்பெரும் மகான்களான அருணகிரிநாதர் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் பாம்பன் சுவாமிகள் சக்கரையம்மா காஞ்சி பெரியவர் என்று இதற்கும் மேல் பல சித்தர்கள் இங்கு வந்து அருள் செய்த இடம்  பாரிமுனையில் உள்ள உயர்நீதிமன்ற வளாகத்தில் பணியாளராக வேலை செய்து பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகளின் சீடரான அப்புடுசாமிகள் போன்று பல மகான்கள் வலம் வந்த இடமே இந்த பாரிமுனை பார்போற்றும் பாரிமுனையில் உள்ள மண்ணடிப் பகுதியில் சாமி ஐயப்பன் போன்ற ஆசனத்தில் அமர்ந்திருந்த லிங்கச்செட்டிபாபா என்று அழைக்கப்பட்ட அருள்வெளி சித்தராவார்.

இவரை மண்ணடிபாபா என்று அழைப்பதும் உண்டு தர்மம்மிகு சென்னை மாநகரம் எப்போதும் மகான்கள் ஞானிகள் யோகிகள் ஆகியோரின் அடையாளமாக திகழ்கிறது.  மண்ணடி பாபா பல்லாயிரம் மகிமைகள் செய்து மக்கள் சேவையில் சிறந்து விளங்கினார் சுவாமிகளின் பூர்வீகம் மதுரை இப்போதும் மதுரையில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் பாபாவின் குரு பூஜையில் கலந்து கொண்டு அருள் பெற்று வருகிறார்கள்.  இன்றும் மண்ணடி பாபாவின் ஜீவசமாதியில் நல்ல ஆன்ம அன்பர்கள் சென்றால் அவர்கள் பார்வைக்கு சித்தர் கண்சிமிட்டி பார்க்கும் அதிசயம் அங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருப்பதாக சொல்கிறார்கள்.  சித்தர்கள் மக்கள் சேவையை பூர்த்தி செய்யவே அவதரிப்பார்கள் அதற்கு முத்தாய்ப்பாக மண்ணடி பாபா மக்கள் சேவையாக அதிலும் குறிப்பாக குழந்தை இல்லாதோரின் குறைகளை நிவர்த்தி செய்யும் மகிமை பெற்றிருந்தார்.

கேட்டதையெல்லாம் கொட்டிக் கொடுக்கும் சக்தி படைத்தவன் கடவுள் என நம்பும் மனிதன் எதை எப்போது எப்படி தர வேண்டும் என்று புத்தி படைத்தவன் கடவுள் என்பதை நம்ப மறுக்கிறான் இந்த உண்மையை தம்மை நாடி வரும் அன்பர்களுக்கு அறிவுறுத்தியவர் மண்ணடி பாபா.  வடபழனியில் வசித்துவந்த ஒரு பெண்மணியின் புதல்வனுக்கு ஏற்பட்ட குறையைத் தீர்த்து வைத்த மெய்சிலிர்க்க வைத்த நிகழ்ச்சி இது அந்த அம்மையாரின் குழந்தை பிறந்து வளர்ந்து சரியான நேரத்தில் பேச்சு வராமல் இருந்ததை கண்டு துயருற்று சுவாமிகளிடம் அழைத்து சென்று காட்டி தங்களது வேதனையை வெளிப்படுத்தித்திருக்கிறார்.  சுவாமிகள் அக்குழந்தையை தன் அருகே வரச்சொல்லுங்க என்றார், அதன்பிறகு அருகிலிருந்த தேநீர் கடையில் இருந்து தேநீர் வாங்கி வரச் சொல்லி குழந்தையை அன்போடு தழுவி சிரித்துக்கொண்டே அதனுடன் தேநீரைக் குடிக்கக் கொடுத்தார் பின்பு அக்குழந்தையின் செவ்விதழில் ஹூ என்று ஒரு ஊது ஊதினார் அவ்வளவுதான் அடுத்த நிமிடம் அந்த குழந்தை வீறிட்டு அழத் தொடங்கியது அடுத்த கணம் அம்மா என்று அழைத்து பேச ஆரம்பித்து விட்டது இந்த காட்சியை கண்டு மெய்சிலிர்த்துப் போயினர் அங்கிருந்தோர்.  சுவாமிகளின் அருளாசியை பெற்று பேசத் தொடங்கிய அந்த குழந்தை இப்போது அமெரிக்காவில் மிகப் பெரிய நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறது என்பது மிகப்பெரும் ஆச்சரியமான உண்மை.

தன் குழந்தைக்கு ஏற்பட்ட இந்த அதிசய நிகழ்ச்சியை கண்ட அந்த தாய் தன் குழந்தைக்கு தான் ஏதும் சேர்த்து வைக்கவில்லை என்றாலும் உண்மையில் சேர்த்து வைத்த ஒரே சொத்து இது போன்ற சித்தர்களின் அருளாசி தான் என்கிறார் நெகிழ்ச்சியோடு கண்களில் ஆனந்தக் கண்ணீர் வடிய .  இதேபோன்று பலரும் பௌர்ணமி அமாவாசை தினங்களில் நடக்கும் சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு சித்தர் சமாதி கோயிலில் பலன் பெற்று வருகின்றனர்.  அங்கிருந்த அன்பர்கள் அப்போது சித்தரை சரியாக புரிந்த வண்ணமாகவே இல்லை அவரை ஒரு பணியாளர் போலவே நடத்தி பல வேலைகளை செய்ய வைத்தனர் சிலவேளைகளில் சுவாமிகள் கல் மண் சுமப்பது மூட்டை தூக்குவது போன்ற கடினமான வேலைகளை செய்து கொண்டிருந்தார் சுவாமிகள் எதையும் எதிர்பார்த்து அவைகளை செய்யவில்லை அவர் உறங்கும் வேளையில் கூட அவரது உறக்கத்தைக் கெடுத்த பாவிகள் பலர் உண்டு ஆனால் சாமிகள் யாரையும் திட்டியதில்லை பழித்ததில்லை மாறாக அவர்களுக்காக வருந்தவே செய்தார்.  சுவாமிகள் எப்போதும் தலையில் முண்டாசுடன் வலது கையில் ஒரு கருப்பு கயிற்றை காப்புக் கயிறு போல கையில் கட்டிக் கொண்டிருப்பார் தம்மை யார் என்ன பேசினாலும் திட்டினாலும் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அவர்களுக்கு நல்லது நடக்க வேண்டியதை செய்து கொண்டிருப்பார்கள் சுவாமிகள் .

ஒரு காலகட்டத்தில் சாமிகள் சமாதி அடைவதற்கு முன்பாக அவரது புகழ் சென்னை நகரம் முழுவதும் பரவியது அவரை தரிசிக்க பலர் வருவதுண்டு நீதியரசர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் , அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என கூட்டம் பெருகியது ஆனால் சாமிகள் எல்லோரையும் சரி சமமாக பாவித்து அவர்களுக்கு அருள் மழை பொழிந்தார்கள் .  மற்றுமொரு அதிசயம் மழை பொழியும் சமயங்களில் சாமிகள் அமர்ந்திருக்கும் இடத்தை தவிர மற்ற இடங்களில் மழை பெய்யும் அதிசயத்தை கண்டவர்கள் பல பேர்கள் உண்டு.  சுவாமிகளின் தவம் ஞானம் யோகம் சித்தம் இவையாவும் அங்கு வந்து ஆசி பெற்ற மக்களுக்கு அமிர்தமாய் கிடைத்தது அவ்வாறு இருந்த சாமிகள் 13/03/1988 ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை மாசி மாதம் பூர நட்சத்திரத்தன்று இறைவனுடன் இரண்டறக் கலந்தார்.

சித்தர்பெருமானின் சமாதியில் பல அற்புதங்கள் இன்னமும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன அங்கு சென்று அவரது அருளை பெற்று வரும் அன்பர்கள் வாழ்வில் பல வளங்களும் நலங்களும் பெற்று வருவது யாவரும் அறிந்த உண்மை.  இவரின் ஜீவசமாதி ஆனது சென்னை ஸ்ரீபெரும்புதூர் வடமங்கலம் விஜிபி என்கிளேவ் நோக்கியா நிறுவனம் எதிரில் உள்ளது.  இவருடைய ஜீவசமாதியை தரிசிக்க சென்ற சமயம் தான் நான் பரஞ்சோதி பாபா, பிரெட் பாபா என்றழைக்கப்படும் வடபழனியில் வாழ்ந்தவருமான ஜீவசமாதியைப் போய் பார்க்க நேர்ந்தது.  இன்றுவரை இவரின் ஜீவசமாதி செல்ல முடியவில்லை.அவரின் தரிசனம் காண என் கண்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

எனக்கு அந்த புண்ணியம் கிட்ட வேண்டும் அதற்கு பிரபஞ்ச சக்தி அருள் புரியவேண்டும்  அருள்வெளி சித்தர் அருளாசி வேண்டும்.  இவருக்கு பாரிமுனையில் தனியாக ஒரு கோயில் அமைத்தும் வழிபட்டு வருகிறார்கள் அவர் வாழ்ந்த இடத்தில் சின்னதாக கோவில் உள்ளது பாரிமுனை லிங்குச்செட்டி தெரு அருகே உள்ளது. சித்தர்கள் ஜீவசமாதி வழிபாடு தேடல் பயணத்தை துவக்கி வைத்ததே சென்னையில் இவரை தேடிச் சென்று காண முடியாமல் போன காரணம் தான் ஏன் எனில் எண்ணற்ற அன்பர்கள் ஜீவசமாதிகள் தேடி அலைந்து கொண்டிருப்பார்கள் அவர்களுக்கு ஒரு நல்ல வழி காட்ட வேண்டும் என்று எண்ணம் தோன்றியது. அதற்காகவே சித்தர்கள் ஜீவசமாதி வழிபாடு தேடல் பயணம் ஆரம்பமானது.

சென்னையில் மட்டுமே 200க்கும் மேற்பட்ட ஜீவசமாதிகள் இருப்பதால் தான் சித்தர்கள் அருளாசி நிறைந்த சென்னை வளம்கொழிக்கும் இடமாக திகழ்கிறது. அதே நேரத்தில் நிறைய ஜீவசமாதிகள் ஆக்கிரமிப்புகளால் கவனிப்பாரற்று கிடப்பதாலேயே சென்னையை நிறைய இயற்கை பேரிடர்கள் வந்து தாக்கியது.  சென்னை தலை நிமிர்ந்து நிற்பதற்கான காரணம் சென்னையைச் சுற்றிலும் இருந்து காத்துக் கொண்டிருக்கும் எல்லை தெய்வங்களைப் போல் விளங்கும் அருள் கடாட்சம் நிறைந்த சித்தர் பெருமக்கள் தான் எந்த ஊரில் சித்தர்கள் ஜீவ சமாதிகள் உள்ளதோ அந்த ஊர் மிகவும் பிரசித்தி பெற்ற ஊராக இருக்கும் அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னையைச் சுற்றிலும் 200 ஜீவசமாதிகள் உள்ளது.  சென்னையில் பிழைப்பு தேடி வந்தவர்களே சென்னையில் வசிக்கிறார்கள் சென்னை ஊர் மக்களை விட பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் இங்கு அதிகம் உள்ளனர் எப்படி இவர்கள் எல்லாம் வெளியூரிலிருந்து வந்து சென்னை வாசிகளாக ஆனார்களோ அதுபோலவே எண்ணற்ற சித்தர் பெருமக்கள் சென்னையை தேர்ந்தெடுத்து அவர்கள் இங்கு வந்து ஜீவசமாதி ஆகியுள்ளனர்.  சென்னை என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் தலைநகரம் மட்டுமல்லாது தமிழகத்தின் நுழைவு வாயிலாகவும் அது திகழ்கிறது சென்னையின் சிறப்பு சித்தர் பெருமக்கள் இங்கு இருப்பதற்கான வெளிச்சம்தான் ஆதலால் தான் என்னவோ ராமேஸ்வரத்திலுள்ள பாம்பனில் இருந்து வந்த பாம்பன் சாமிகள் இங்கு வந்து ஜீவசமாதி ஆகியுள்ளார்.


அது போல ஏகப்பட்ட சித்தர் பெருமக்கள் ஜீவ சமாதி ஆகி உள்ளனர் எங்கிருந்தோ வடநாட்டிலிருந்து வந்த நந்தி பாபா என்ற பப்லு பாபா கூட சமீபத்தில் தான் சென்னையில் இறைவனுடன் இரண்டறக் கலந்து அவருக்கு காஞ்சிபுரம் அருகே அவருக்கு சமாதி எழுப்பியுள்ளனர் அவரின் பக்தர்கள் அதுபோலவே சென்னையின் நான்கு திசைகளிலும் சித்தர் பெருமக்கள் இருந்து காவல் காத்துக் கொண்டு மக்களுக்கு உறுதுணையாக இருந்து கொண்டிருக்கிறார்கள் .  எதிர்மறையான எண்ணங்கள் விலக சித்தர் பெருமக்களை சரணடைவதே சரியான வழியாகும். கர்மவினைகளிலிருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகளை நெறிமுறைகளை சித்தர் பெருமக்கள் எளியமுறையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சொல்லி வைத்து சென்றுள்ளார்கள் சித்தர் பெருமக்களின் சித்துக்கள் தான் ஏராளம் தாராளம் அவர்கள் கண்டுபிடித்த அரிய விஷயங்களை தான் இன்று நவீன காலத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து கொண்டிருக்கிறார்கள் .

கூடுவிட்டு கூடு பாய்வது, வான்வெளியில் பறப்பது, மூலிகைகள் கொண்டு பச்சிலைகள் கொண்டு நோய்களை குணப்படுத்துவது, நிமிடத்தில் நாடு விட்டு நாடு செல்வது, கண்டம் விட்டு கண்டம் செல்வது, இது போன்ற சித்து விளையாட்டுக்கள் எல்லாம் சித்தர் பெருமக்கள் அரங்கேற்றியதே.  சித்தர் பெருமக்கள் பணத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை மண்ணையும் தங்கம் ஆக்குவார்கள் தங்கத்தையும் நினைத்தால் தகரமாக்குவார்கள் மனிதனையும் தெய்வம் ஆக்குவார்கள்.

 சித்தர் பெருமக்கள் மிருகங்களுடன் தோழமை கொண்டவர்களாகவே இருப்பார்கள்  எல்லா ஜீவ சமாதிகளிலும் கண்டிப்பாக பைரவர் ஒருத்தர் கண்டிப்பாக இருப்பார் நாய் ரூபத்தில் அவருக்கு சித்தருடன் தொடர்பு உண்டு.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


mahans in chennai chennai siddhargal , jeeva samadhi in chennai chennai siddhar , siddhar temple in chennai chennai siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in chennai , siddhar temples in chennai chennai sitthargal , siddhars in chennai ,

No comments:

Post a Comment